சாலையோரம் நடந்த வாழப்பாடியின் வன்னியர் சங்கக் கூட்டம்
சென்னை:
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மண்டபம் கிடைக்காததால், வாழப்பாடி ராமமூர்த்தி ஆதரவு வன்னியர் சங்க ஆலோசனைக் கூட்டம் சாலையோரம்நடத்தப்பட்டது.
ராமதாசுக்கு போட்டியாக வாழப்பாடி ராமமூர்த்தி வன்னியர் சங்கம் நடத்தி வருகிறார். அந்த சங்கத்தின் சார்பில் விழிப்புணர்வு மாநாடு நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஆலோசனைக் கூட்டம் கூடுவாஞ்சேரியில் நடக்கவிருந்தது.
வாழப்பாடி ராமமூர்த்தி, வன்னியர் அடிகளார், தமிழ் பா.ம.க. தலைவர் தீரன் மற்றும் வன்னியர் தலைவர்கள் கலந்து கொள்வதாக இருந்த இந்தகூட்டத்திற்கு சென்னையில் ஒரு தனியார் திருமண மண்டபம் "புக் செய்யப்பட்டிருந்தது.
கூட்ட ஏற்பாடுகளை வாழப்பாடி ஆதரவாளர்கள் சந்திரன், தியாகு என்பவர்கள் செய்து கொண்டிருந்தனர். ஆனால், கூட்டத்திற்கு ஓரிரு நாட்கள் முன்இருவரையும் திடீரென்று காணவில்லை.
இருவரும் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதோடு நிற்காமல், வாழப்பாடிக்கு கூட்டம் நடத்த மண்டம் கொடுத்தால் வெடிகுண்டு வைத்து தகர்த்து விடுவோம் என்று தொலைபேசியில் மிரட்டல்வந்ததால், மண்டப உரிமையாளர் இடம் தர மறுத்து விட்டார்.
இதையடுத்து வேறு வழியின்றி சாலையோரத்தில் "சாமியானா பந்தல் போடப்பட்டு கூட்டம் நடத்தப்பட்டது. வன்முறை ஏற்படலாம் என்பதால்வாழப்பாடி ராமமூர்த்தி மட்டும் வரவில்லை. மற்றவர்கள் பங்கேற்றுப் பேசினர்.












Click it and Unblock the Notifications