ரூ. 10 கோடி போலி ஸ்டாம்புகள் பறிமுதல் - 10 பேர் கைது
பெங்களூர்:
பெங்களூரில் போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் ரூ. 10 கோடி மதிப்புள்ள போலி ஸ்டாம்புகள், முத்திரைத்தாள்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 10 பேர் கொண்ட கும்பல் கைதுசெய்யப்பட்டது.
இது குறித்து பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் டி. மடியாள் நிருபர்களிடம் கூறியதாவது:
பெங்களூர் நகரில் ஒரு கும்பல் போலி ஸ்டாம்புகள் மற்றும் முத்திரைத் தாள்களை அச்சடித்து அவற்றை பன்னாட்டுநிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விற்று வருவதாகத் தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து அக் கும்பலைப் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டது. இத் தனிப் படையினர் சுபேதார் சத்திரம்ரோட்டில் உள்ள கடை ஒன்றில் சோதனை நடத்தியதில் அங்கு விற்பனை செய்யப்படும் ஸ்டாம்புகள் அனைத்தும்போலி என்று தெரிய வந்தது.
இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த ஸ்டாம்புகளைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். அந்த கடையில்இருந்தவரிடம் விசாரணை நடத்தியதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் நகரில் மேலும் சில இடங்களிலும்சோதனை நடத்தப்பட்டது.
இச் சோதனையின் முடிவில் சுமார் ரூ. 10 கோடி மதிப்புள்ள போலி ஸ்டாம்புகளும், முத்திரைத் தாள்களும்பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கும்பலைக் பிடித்த தனிப் போலீஸ் படையினருக்கு ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றார்மடியாள்.
தனிப் போலீஸ் படையினருக்கு முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கேஆகியோர் பாராட்டுத் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.