ரங்கராஜன் உடல் நிலை மேலும் மோசமடைந்தது
டெல்லி:
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மத்திய மின் துறை அமைச்சர் ரங்கராஜன்குமாரமங்கலத்தின் உடல் நிலை மேலும் மோசமடைந்துள்ளது என்று மருத்துவர்கள்தெரிவித்தனர்.
ஆகஸ்ட் 12-ம் தேதி திடீரென்று உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து டெல்லியில்உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் மைய மருத்துவமனையில் ரங்கராஜன்குமாரமங்கலம் சேர்க்கப்பட்டார்.
கோமா நிலையில் சேர்க்கப்பட்ட அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் அவர் நினைவு திரும்பாத நிலையில் உள்ளார்.
திங்கள்கிழமை அன்று அவரது ரத்த ஓட்டத்தில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது.ஆனால், செவ்வாய்க்கிழமை அவரது நிலைமை மேலும் மோசமடைந்துவிட்டது என்றுஅவருக்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவ சிகிச்சைக்கு அவரது உடல் பாகங்களும், ரத்த அழுத்தமும் உடன்படவில்லைஎன்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அமைச்சருக்குத் தொடர்ந்து உயிர்காப்புக்கருவிகளின் உதவியுடன்தான் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பி.டி.ஐ.