ரங்கராஜன் மறைவு.... தலைவர்கள் இரங்கல்
பெங்களூர்:
மத்திய மின்துறை அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் மரணமடைந்ததற்குக் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தனது ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துள்ளார்.
முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், துடிப்பான ஒரு இளம் அமைச்சரை நாம் இழந்து விட்டோம். இந்தியா சிறந்த இளைய தலைமுறை தலைவரைஇழந்து விட்டது மிகுந்த வேதனையளிக்கக்கூடிய விஷயமாகும் என்று கூறியுள்ளார்.
கர்நாடக சட்டசபை ஐக்கிய ஜனதாதள தலைவர் பி.ஜி.ஆர்.சிந்தியா, இளைய நேர்மையான அமைச்சரை நாம் இழந்து விட்டோம் என்று தனது இரங்கல்செய்தியில் கூறியுள்ளார்.
கர்நாடக அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே தனது இரங்கல் செய்தியில், ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மறைவு நாட்டுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பாகும்என்றார்.
குஜராத் கவர்னர் சுந்தர் சிங் பன்டாரியும், முதல்வர் கேசவ்பாய் படேலும் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பொதுவாழ்க்கையில் ரங்கராஜன் ஆற்றியுள்ள சேவையை இந்த சமுதாயம் எப்போதும் மறக்காது என்று பன்டாரியும், ரங்கராஜனின் மறைவு மிகப்பெரியஇழப்பு என்று முதல்வர் படேலும் தங்களது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ரங்கராஜன் மறைவு குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில், ரங்கராஜன் சிறந்த நிர்வாகி.திறமையுள்ள அமைச்சரான அவர் எனது நல்ல நண்பரும் கூட. இளம் அமைச்சரை நாம் இன்று இழந்து தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்றுகூறியுள்ளார்.
யு.என்.ஐ.