For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வருகிறது விசைத்தறி மையங்கள்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

விசைத்தறிகள் அதிகம் உள்ள இடங்களில் விசைத்தறி மையங்களை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மத்திய ஜவுளித் துறைஇணைக் கமிஷனர் தீபக் ஷெட்டி தெரிவித்தார்.

திருப்பூரில் கருத்தரங்கைத் துவக்கி வைத்த மத்திய ஜவுளித் துறை இணைக் கமிஷனர் தீபக் ஷெட்டி கூறியதாவது:

வளர்ந்து வரும் வர்த்தகத்திற்கு ஏற்ப ஜவுளித் துறை பற்றிய நவீனப் பாடத் திட்டங்களை உருவாக்க வேண்டும். இதில் தரமான கல்வி அளிக்கஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும்.

தொழில் நுட்பக் கல்வியோடு, வர்த்தகத்தை அலசி ஆராயும் கல்வி முறையையும் ஏற்படுத்த வேண்டும். ஜவுளித் துறையில் கடந்த 1995ம் ஆண்டு முதலேநவீனமயமாக்கல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அடுத்த ஒரு ஆண்டில் இந்த துறையில் தாள்கள் பயன்படுத்தப்படமாட்டது. அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு அனைத்துப் பணிகளும் விரைந்துமுடிக்கப்படும். இதற்கென தனியார் நிறுவனங்கள் தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவில் உற்பத்தியாகும் நூலிழைகள் தவிர 5 சதவீதம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலை விரைவில்மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நமது நாட்டில் உற்பத்தி செலவு முதலீட்டு செலவை விட கூடுதலாக உள்ளது.

ஜவுளி மேம்பாட்டுத் திட்டத்திலும், தொழில் நுட்ப மேம்பாட்டு நிதியிலிருந்தும் இதுவரை 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்று தீபக்ஷெட்டி தெரிவித்தார்.

விழாவில் தேசிய ஜவுளிக் கமிட்டியின் சேர்மன் ராமன் உட்பட திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கலந்து கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X