புதுவையில் 27-வது தேசிய சப்-ஜூனியர் கூடைப்பந்து போட்டிகள்
டெல்லி:
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் தடகள விளையாட்டுக்களில் இந்தியாவின் சார்பில் 33 பேர்கலந்து கொள்கின்றனர்.
எப்போதும் இல்லாத அளவுக்கு சிட்னி ஒலிம்பிக்கில்தான் 116 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது. இதில் 9 அதிகாரிகளும், 20 பேர்கொண்ட இந்திய ஆண்கள் ஹாக்கி அணியும் அடங்கும்.
அணியிலேயே பெரியதாக 33 பேர் கொண்ட தடகள அணி இருக்கும். காயத்தால் சமீபகாலமாக ஓய்வில் இருந்த சுனிதா ராணியும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார். இந்திய தடகள அணியில் 16 பேர் பெண்கள்.
இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய தடகள அணிகளிலேயே இதுதான் பெரிய அணி என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர, குத்துச் சண்டைப் பிரிவில் 4 அதிகாரிகள் உள்பட 8 பேர், குத்துச் சண்டைப் பிரிவில் 4 அதிகாரிகள் உள்பட 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications