போலீசுக்கு சயனைட் பிஸ்கட் அனுப்பியவர் கைது
கோவை:
கோவை போலீஸ் நிலையத்திற்கு பழங்கள் மற்றும் பிஸ்கட்டுகளில் சயனைடு தடவிஅனுப்பிய அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரைப் போலீசார் கைது செய்தனர்.
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உக்கடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு (பி12),ஒரு மர்ம பார்சல் வந்தது. இன்ஸ்பெக்டர் முத்துராஜ் பெயரில் வந்த இந்த பார்சலில்பழங்கள், பேரீச்சம்பழம், கிரீம் பிஸ்கட் ஆகியவை இருந்தது.
இதில், சயனைடு தடவப்பட்டிருந்ததைப் போலீசார் கண்டு பிடித்தனர். போலீசாரைக்கூண்டோடு தீர்த்துக்கட்ட செய்யப்பட்டிருந்த இந்த சதித் திட்டத்தை போலீசார்முறியடித்தனர்.
இதனையடுத்து இந்த பழங்கள் மற்றும் பிஸ்கட்டுகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன.இந்த சோதனை முடிவுகள் இவற்றில் சயனைடு இருப்பதை உறுதி செய்தது.
இந்த பார்சலை அனுப்பியவர்கள் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டனர். சதித்திட்டம் தீட்டியவர்கள் குறித்து தீவிர விசாரணைநடத்தினர்.
விசாரணையில் பார்சலை அனுப்பியவர் கோவை கோட்டைமேட்டில் உள்ள எம்.ஜிநகரைச் சேர்ந்த அக்பர் (22) எனத் தெரிய வந்தது. இவரைப் போலீசார் கைது செய்துவிசாரணை மேற்கொண்டனர். அக்பர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட அல் உம்மாஇயக்கத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications