For Daily Alerts
Just In
இன்டர்நெட்டில் நுழைகிறது தமிழக காவல்துறை
சென்னை:
தமிழ்நாடு காவல்துறைக்காக இன்டர்நெட் தளத்தை உருவாக்க பிரபலமான அம்பிகாகுழுமம் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
குழுமத் தலைவர் கிருஷ்ணா இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம்கூறுகையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்தில் காவல்துறைக்கென தனிஇன்டர்நெட் தளத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இதேபோல பிறமாவட்டங்களிலும் இன்டர்நெட் தளங்களை அக்ைகவுள்ளோம்.
விசாகப்பட்டனத்தில் எங்களுக்குக் கிடைத்த வெற்றியையடுத்து தற்போதுதமிழகத்திலும் போலீசுக்கென தனி இன்டர்நெட் தளம் ஏற்படுத்த முன்வந்துள்ளோம்.
இன்டர்நெட் தளம் அமைப்பது தொடர்பாக தமிழக காவல்துறையுடன் விரைவில்ஒப்பந்தம் கையெழுத்தாகும். இன்டர்நெட் தளம் வந்தவுடன் பொதுமக்கள் தங்களதுபுகார்களை இன்டர்நெட் மூலம் பதிவு செய்யலாம் என்றார் அவர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Sunday, August 27, 2000, 5:30 [IST]