For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கார் விபத்தில் தொழிலதிபர் குடும்பத்தோடு பலி

By Staff
Google Oneindia Tamil News

நெல்லை:

நெல்லை அருகே பஸ்சும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர்உள்பட 6 பேர் பலியானார்கள்.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சூசை அந்திரியாஸ் (41). இவர் தனது குடும்பத்துடன் காரில்வேளாங்கண்ணிக்குச் சென்றிருந்தார். அங்கு தன் குடும்பத்துடன் மாதா கோவிலில் வழிபட்டு விட்டு அங்கிருந்துகாரில் ஞாயிற்றுக்கிழமை காலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

நெல்லை என்ஜினியரிங் கல்லூரி அருகே அவர்கள் சென்ற கார் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த பஸ்மோதி விடாமல் இருப்பதற்காக காரைத் திருப்பியபோது பஸ் மீது மோதியது. இதில் சூசை சம்பவ இடத்திலேயேஇறந்தார். காரை ஓட்டி வந்த டிரைவர் குமார் மற்றும் சூசையின் மனைவி லூசி சூசையும் சம்பவ இடத்திலேயேஇறந்தனர்.

அவரது மகள்கள் ஸ்டெபி சூசை (10), சினேகா 6, ஆறு மாதப் பெண்குழந்தை ஆகியோர் பலத்த காயமடைந்தநிலையில் பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சைபலனின்றி இறந்தனர். விபத்தில் சிக்கிய இந்தக் கார் 160 கிலோமீட்டர் வேகத்தில் வந்தது. பஸ்சின் பின்பகுதியில்புகுந்த காரை பஸ்சைத் தூக்கிய பின்புதான் எடுக்க முடிந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X