பாகிஸ்தானில் எல்லைக்குள் எரிந்து விழுந்த ஆளில்லாத விமானம்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் டேரா காசி கான் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆளில்லாத விமானம் ஒன்று பறந்து பின்னர் கீழே விழுந்து எரிந்தது.
அணுகுண்டுகள் தயாரிக்க உதவும் யுரேனியம் அதிகம் உள்ள பகுதியில் இந்த விமானம் விழுந்து நொறுங்கியது குறிப்பிடத்தக்கது. ஞாயிற்றுக்கிழமைஇரவு டேரா காசி கான் பகுதியின் மேற்குப் பகுதியில் பறந்த இந்த விமானம் போர்ட் முன்ரோ, ராகி கன்ஞ்ச் பகுதி வழியாக பறந்து பின்னர்பாகல்சோர் பகுதியில் நொறுங்கி விழுந்து, சில நிமிடங்களில் எரிந்தது.
யுரேனியம் வளம் மிக்க பாகல்சோர் பகுதியில் பொதுவாக வெளிநாட்டினரோ, விமானங்களோ அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் இந்தப் பகுதியில்எப்படி இந்த விமானம் வந்தது என்பது மர்மமாக உள்ளது.
ராஜன்பூர் பகுதியில் கடந்த 15 ம் தேதி பகுதியில் ஆளில்லாத விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது நினைவிருக்கலாம். அந்த விமானம் விழுந்துநொறுங்கிய இரண்டு வாரத்திற்குள் இந்த விமானம் விழுந்து நொறுங்கியது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், இது பயிற்சி ஏவுகணை என்பதைஇஸ்லாமாபாத் விமானத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
யு.என்.ஐ.