தனி தமிழ் தேசத்திற்கான முதல் நடவடிக்கையே ராஜ்குமார் கடத்தல்
சென்னை:
தனித் தமிழ் தேசம் அமைவதற்கான முதல் நடவடிக்கையே நடிகர் ராஜ்குமார் கடத்தல் என்று தமிழர் விடுதலைப் படை தீவிரவாதி ரேடியோ வெங்கடேசன்கூறியுள்ளார்.
சந்தன வீரப்பன் விடுதலை செய்யக் கோரும் தடா கைதி ரேடியோ வெங்கடேசன், திங்கள் கிழமை நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார். அப்போதுஅவரை நிருபர்கள் சூழ்ந்தனர். அதியமான் கோட்டை வெடிகுண்டு வழக்கில் தொடர்புடையவர் வெங்கடேசன்.
கோர்ட் வளாகத்தில் வெங்கடேசன் அளித்த பேட்டி:
தனித் தமிழ் தேசம் அமைப்பதற்கான முதல் நடவடிக்கையே ராஜ்குமார் கடத்தல். இதுதான் ஆரம்பம். 1991-92-ல் கர்நாடகத்தில் தமிழர்களுக்குஎதிரான வன்முறைச் சம்பவத்திற்கு நடிகர் ராஜ்குமாரும், அப்போதைய முதல்வர் பங்காரப்பாவும்தான் காரணம்.
இதற்கு மேல் நாங்கள் யாரையும் கடத்த மாட்டோம். பொதுமக்களிடம் எங்களது போராட்டத்தை எடுத்துக்கூறி ஆதரவு திரட்டுவோம்.
என் மீதான வழக்குகளில் இருந்து என்னை விடுதலை செய்தால், நான் வீரப்பனுடன் சேர்ந்து கொள்வேன். இதற்கு முன் வீரப்பனை நான் சந்தித்தது இல்லை.ஆனால், எனது தோழர்களுக்கு வீரப்பனை நன்கு தெரியும். வீரப்பன் தமிழ் போராளிகளின் தலைவர்.
எங்களுடைய முக்கிய கோரிக்கையே காவிரி பிரச்னை தான். வறட்சியான காலத்தில் தண்ணீர் விட மறுக்கும் கர்நாடக அரசு, மழைக் காலத்தில்திறந்து விட்டு அதிக வெள்ளச் சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நமது விவசாயிகள் மழைக் காலத்திலும் பாதிப்படைகிறார்கள்.
எங்கள் போராட்டம் மக்களுக்காக தானே தவிர எங்களுக்காக அல்ல. மக்களுக்காக நாங்கள் ஆயுதம் ஏந்துகிறோம். தேயிலை தோட்டதொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களிடம் உழைப்பை சுரண்டும் முதலாளிகள் அவர்களை பற்றி கவலைப்படுவதில்லை.தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்க வசதி செய்து தருவதில்லை. 20 வீடுகளுக்கு ஒரு வீட்டில் தான் மின் விளக்கு வசதி உள்ளது. இவர்களுக்காகவும்நாங்கள் போராடுகிறோம்.
கர்நாடகாவில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படாமல் 15 ஆண்டாக மூடிக் கிடக்கிறது. உலக மொழிகளில் பைபிளுக்கு பிறகு அதிக மொழிகளில்மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை எழுதிய கவிஞனுக்கு கர்நாடகா கொடுக்கும் அவமரியாதையை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
இதுபோன்ற பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக மக்களின் பிரதிநிதிகளாக நாங்கள் ஆயுதம் ஏந்தி போராடி வருகிறோம் என்றார்வெங்கடேசன்.