எதிர்ப்புக்கு மத்தியில் கையெழுத்தான புருண்டி அமைதி ஒப்பந்தம்
அருஷா (தான்சானியா):
புருண்டி அமைதி ஒப்பந்தம் திங்கள்கிழமை கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்துக்கு சில டுட்சி கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
ஆப்பிரிக்க நாடான புரூண்டியில் ஹுடு இன மக்களுக்கும், டுட்சி இன மக்களுக்கும் இடையே 7 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுச் சண்டை நடந்துவருகிறது. இச் சண்டையில் ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர்.
இதையடுத்து புரூண்டியில் உள்நாட்டுச் சண்டையை நிறுத்தி அங்கு அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன்மன்டேலாவும் அமெரிக்க அதிபர் பில் கிளின்டனும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இரு தலைவர்களும் மேற்கொண்ட முயற்சிக்கு புருண்டியின் பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அமைதித் திட்டத்தில் கையெழுத்திட அவைஒப்புக் கொண்டன.
அதன்படி அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் 13 ஹுடு ஆதரவு அரசியல் கட்சிகள் கையெழுத்திட்டன. ஆனால், 6 டுட்சி ஆதரவு கட்சிகள் அந்தஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டன.
ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகளும், முக்கிய எதிர்க்கட்சிகளும் இந்த அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
முன்னதாக டுட்சி ஆதரவு கூட்டணியைச் சேர்ந்த 10 கட்சிகளும் இந்த அமைதி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. ஆனால், இதில் 4 கட்சிகள் தங்கள்முடிவை மாற்றிக் கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
ஆப்பிரிக்க நாடுகளுக்கு இரண்டாவது முறையாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க அதிபர் பில் கிளின்டன், இந்த புருண்டி அமைதி ஒப்பந்தத்தைஏற்றுக் கொண்டு அதில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த டுட்சிக்களின் நடவடிக்கைக்கு நெல்சன் மன்டேலா கண்டனம் தெரிவித்துள்ளார்.