தடா கைதிகளை விடுவிக்க 3 மணிவரை தடை
பெங்களூர்:
51 தமிழ் தடா கைதிகளை நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பதற்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
51 பேருக்கும் மைசூர் தடா நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஜாமீனில் செல்ல அனுமதியளிக்கப்பட்டது.இவர்களுக்கான ஜாமீன் தொகையான ரூ 51, 000 பணத்தை நடிகர்கள் அம்பரீஷ், விஷ்ணு வர்த்தன் மற்றும்ராஜ்குமார் நடிகர் சங்கத் தலைவர் சாரா கோவிந்த் ஆகியோர் வழங்கினர்.
இந்த நிலையில் 51 தமிழ் கைதிகளையும் ஜாமீனில் விடுவிப்பதை எதிர்த்து வீரப்பன் கும்பலால்சுட்டுக்கொல்லப்பட்ட கர்நாடக சப்-இன்ஸ்பெக்டர் ஷகீல் அகமதுவின் தந்தை அப்துல் கரீம் சுப்ரீம் கோர்ட்டில்மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீது செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்முடிவு செய்தது. அதுவரை 51 பேரையும் ஜாமீனில் விட இடைக்காலத் தடை விதித்தது.
இதற்கிடையே 51 கைதிகள் மீதுள்ள தடா வழக்குகளை வாபஸ் பெற மாநில அரசு முடிவு செய்தது சரிதான் என்றுசுப்ரீம் கோர்ட்டில் விளக்குவதற்காக மாநில அட்வகேட் ஜெனரல் ஜெயராம் டெல்லி விரைந்தார்.
முன்னதாக, 51 கைதிகளும் செவ்வாய்க்கிழமை காலை விடுவிக்கப்படுவதாக இருந்தது.