மயக்கமடைந்தது போல நடித்து எஸ்கேப் ஆன கைதி
சென்னை:
பல மாதங்கள் தேடி கண்டுபிடித்த கைதி, போலீசாருக்கு "தண்ணி காட்டி விட்டுதலைமறைவாகி விட்டார்.
திண்டுக்கல் அருகே அய்யலூரை சேர்ந்தவன் கிருஷ்ணமூர்த்தி. பல கிரிமினல்வழக்குகளில் சம்பந்தப்பட்டவர். இவரை பல நாட்களாக முயற்சி செய்து வடமதுரைபோலீசார் கைது செய்தனர்.
வெற்றிப் புன்னகையோடு வேடசந்தூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்துவதற்காககொண்டு சென்றனர். எப்படி போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்கலாம் என்று சிந்தித்துக்கொண்டே வந்த கிருஷ்ணமூர்த்திக்கு, நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் வழியில்காலில் லேசான காயம் ஏற்பட்டது.
போலீசாரிடம் அதை பெரிதாக காட்டிக் கொள்ளாமல் வந்தார் கிருஷ்ணமூர்த்தி.நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, அந்த காயத்தைகாட்டி வலி உயிர் போகிறது, அதோடு என்னை இழுத்து வந்து விட்டார்கள் என்றுகண்ணீர் வீட்டார்.
உடனே மாஜிஸ்திரேட், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலில் சிகிச்சைஅளியுங்கள் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.
எரிச்சலுடன் போலீசார் கைதியை அழைத்துக் கொண்டு திண்டுக்கல் அரசுமருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் நுழைந்ததும்,தலை சுற்றுகிறது, மயக்கமாக வருகிறது என்று கூறிய அந்த கைதி அங்கேயே அமர்ந்துகொண்டார்.
இதை உண்மையென்று நம்பிய போலீசார், உடனே டாக்டரை அழைத்து வருமாறு ஒருபோலீஸ்காரரிடம் கூறினார். இதையடுத்து டாக்டரை கூப்பிடுவதற்காக அந்தபோலீஸ்காரர் வேகவேகமாக சென்றார்.
அதையெல்லாம் கேட்டுக் கொண்டே படுத்திருந்த கிரிமினல்" கிருஷ்ணமூர்த்திகண்ணை திறக்கவே இல்லை. போன போலீஸ்காரர் திரும்பி வர தாமதம் ஆனதால்இன்னொரு போலீஸ்காரரும், கைதி மயக்கத்தில் தானே இருக்கிறான் என்று எண்ணிக்கொண்டு கிளம்பினார்.
இது தான் சமயம் என்று பார்த்துக் கொண்டிருந்த கைதி கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்துவிடு ஜூட்.
கிடைத்த கைதியைத் தப்ப விட்ட போலீஸார் மீண்டும் தேடுதல் வலையை வீசிக்கைதிக்காகக் காத்துக் கொண்டுள்ளனர்.