சென்னை-துபாய் இடையே நேரடி விமானம்: எமிரேட்ஸ் இயக்குகிறது
துபாய்:
சென்னைக்கும் துபாய்க்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்தை எமிரேட்ஸ்நிறுவனம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
டெல்லி-துபாய், மும்பை-துபாய் அடுத்து இந்தியாவில் மூன்றாவது நகரமாகசென்னைக்கு நேரடி விமானப் போக்குவரத்து எமிரேட்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.
துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இருந்து ஏர்பஸ் 310-300 விமானம்அதிகாலை 2 மணிக்குச் சென்னைக்குப் புறப்பட்டது.
துபாயிலிருந்து சென்னைக்கு திங்கள், புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளிலும்,சென்னையிலிருந்து துபாய்க்கு திங்கள், வியாழன், வெள்ளி மற்றும்ஞாயிற்றுக்கிழமைகளிலும் விமானங்கள் இயக்கப்படும்.
இந்தியாவின் பெரிய வர்த்தக மையங்களில் சென்னை மாநகரமும் ஒன்று. மேலும்,இந்திய சாப்ட்வேர் வளர்ச்சியில் இதயமாக விளங்குகிறது.
சென்னைக்கு நேரடி விமான சர்வீஸை அறிமுகப்படுத்துவதன் மூலம் நாங்கள்மகிழ்ச்சியடைகிறோம். இந்த விமான சர்வீஸ் வெற்றிகரமாக அமையும் என்றுஎதிர்பார்ப்பதாக எமிரேட்ஸ் நிறுவனத்தின் வர்த்தப் பிரிவு இயக்குநர் கைய்த் அல்கைய்த் தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications