முதல்வர் பதவியிலிருந்து விரைவில் ஓய்வு - ஜோதி பாசு
கல்கத்தா:
முதல்வர் பதவியிலிருந்து விரைவில் ஓய்வுபெற உள்ளதாக மேற்கு வங்க முதல்வர்ஜோதிபாசு தெரிவித்தார்.
இது குறித்து கல்கத்தாவில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
முதல்வர் பதவியிலிருந்து விரைவில் ஓய்வு பெற விரும்புகிறேன். எனது வயது மற்றும்உடல்நிலை காரணமாக என்னால் தொடர்ந்து முதல்வராக பணியாற்ற முடியாது என்றுகருதுகிறேன்.
மாநில இடது சாரி கமிட்டித் தலைவராக இருக்கும்படி கூட்டணிக் கட்சிகளிடமிருந்துஅழைப்பு வந்துள்ளது. அது குறித்து இடது சாரி கட்சிக் கூட்டத்தில் விவாதித்து முடிவுஎடுக்கப்படும் என்றார் ஜோதிபாசு.
ஜோதி பாசுவின் ஓய்வு குறித்து, சீனாவுக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ள மார்க்சிஸ்ட்கட்சிப் பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் இந்தியா திரும்பிய பிறகு முடிவுசெய்யப்படும் என்று தெரிகிறது.
ஜோதி பாசுவின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டுதான் புத்தாதேவ் பட்டாச்சார்யாமேற்கு வங்க துணை முதல்வராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.