அதிபர் சந்திரிகாவுக்கு முஸ்லிம் கட்சி மீண்டும் ஆதரவு
கொழும்பு:
அதிபர் சந்திரிகா குமாரதுங்காவுக்கு இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் தனதுஆதரவைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
சந்திரிகாவின் மக்கள் கூட்டணிக்கு ஆதரவளித்து வந்த இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்கடந்த ஆண்டு தனது ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டது.
இப்போது அக் கட்சி தனது ஆதரவை சந்திரிகாவுக்கும் மீண்டும் அளிக்க முன்வந்துள்ளது. அக் கட்சித் தலைவர் எம்.ஹெச்.எம். அஷ்ரப், அதிபர் சந்திரிகாவைபுதன்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது தனது ஆதரவை அவர் தெரிவித்தார்.
இலங்கை முஸ்லிம் கட்சிக்கு எதிராகச் செயல்பட்ட போக்குவரத்துத் துறை அமைச்சர்பெளசீ மீது ஒழுங்கு முறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபர் சந்திரிகா உறுதிஅளித்தார். இந்த உறுதிமொழியை அடுத்து சந்திரிகாவுக்கு தனது ஆதரவை அக் கட்சிதெரிவித்துள்ளது.
அக்டோபர் 10-ம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஐக்கியகூட்டணி என்ற பெயரில் போட்டியிடப்போவதாகவும், தேர்தலில் அதிபர்சந்திரிகாவுக்கு ஆதரவு அளிக்கப் போவதாகவும் அஷ்ரப் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications