ஐ.நா.கூட்டத்தில் இன்று பேசுகிறார் வாஜ்பாய்
நியூயார்க்:
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் வாஜ்பாய் அங்கு நடக்கும் ஐ.நா. சபையின் மில்லனியம் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை பேசுகிறார்.
பிரதமர் வாஜ்பாய் 13 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நடந்து கொண்டுள்ள ஐ.நா.சபையின் மில்லினியம் வருட கூட்டத்தில்கலந்து கொண்டு வெள்ளிக்கிழமை உரையாற்றுகிறார்.
அணு ஆயுத சோதனை, காஷ்மீர் பிரச்சினை என முக்கியமான பின்னணியில் வாஜ்பாயின் உரை முக்கியத்துவம் பெறுகிறது. ஏற்கனவே வியாழக்கிழமைபேசிய பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப், காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்தியாவைக் குற்றம் சாட்டிப் பேசியுள்ளார். அதற்கு வாஜ்பாய்உரையில் பதில் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில், ஐ.நா.சபைக் கூட்டத்தில் பேசுவோரின் பட்டியலில் வாஜ்பாய் பெயர் 30-வதாக இருந்தது. தற்போது அதற்கு முன்னதாகவே அவர் பேசுவார்என்று கூறப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கான காரணம் தெரியவில்லை. வாஜ்பாயின் உடல்நிலை காரணமாக அவர் முன்னதாக பேசஅனுமதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
தனது சுற்றுப்பயணத்தின்போது நேபாள பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரையும் வாஜ்பாய் சந்தித்துப் பேசத்திட்டமிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை பேஷன் டெக்னாலஜி வளாகத்தில் நடக்கும் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு இரண்டு புத்தகங்களை வாஜ்பாய்வெளியிடுகிறார். அதே இடத்தில் உலக ஆயுர்வேதக் கருத்தரங்கத்தையும் தொடங்கி வைக்கிறார்.
பின்னர் ஸேட்டன் தீவு செல்கிறார். அங்கு அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
செப்டம்பர் 13 ம் தேதிவரை நியுயார்க்கில் இருக்கும் பிரதமர் வாஜ்பாய், அன்று தலைநகர் வாஷிங்டன் செல்வார். அங்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின்காங்கிரஸ் சபையில் உரையாற்றுகிறார். பின்னர், அமெரிக்க அதிபர் கிளின்டனை சந்தித்துப் பேசுவார்.
முன்னதாக, நியூயார்க்கிலுள்ள கென்னடி சர்வதேச விமானநிலையத்தில் வியாழக்கிழமை வந்து சேர்ந்த பிரதமர் வாஜ்பாய் அங்கிருந்து நேராக மான்ஹட்டன்பகுதியிலுள்ள வால்டுரோப் அஸ்டோரியா ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஹோட்டலில் உள்ள 21 வது மாடி அறை முழுவதும் வாஜ்பாய்க்காகவும், அவருடன் சென்றுள்ள உயர்அதிகாரிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்குவாஜ்பாய் சென்றதும் அவருக்கு இந்தியத் தூதர் நரேஷ் குப்தா வரவேற்பளித்தார்.ஐ.ஏ.என்.எஸ்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications