பாரத் சஞ்சார் நிகம் என்று பெயர் மாறுகிறது தொலைத்தொடர்பு சேவைத் துறை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மத்திய அரசுக்குச் சொந்தமான தொலைத் தொடர்பு சேவைத் துறை, தனிநிறுவனமாக்கப்படவுள்ளது. பிரதமர் வாஜ்பாய் தலைமையில் வியாழக்கிழமைநடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

தொலைத் தொடர்புத் துறையில் தனியார்களை அனுமதிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. அம் முடிவின் முதல் கட்டமாக தொலைத் தொடர்பு சேவைத் துறை தனிநிறுவனமாக்கப்பட்டுகிறது. புதிய நிறுவனத்துக்கு பாரத் சஞ்சார் நிகம் என்றுபெயரிடப்படவுள்ளது.

இப் புதிய நிறுவனத்தின் மொத்த மூலதனம் ரூ. 10 ஆயிரம் கோடியாகும். இதில்ஆரம்ப முதலீடாக மத்திய அரசு ரூ. 5 ஆயிரம் கோடியை ஒதுக்கும். இப் புதியநிறுவனம் அக்டோபர் 1-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும்.

தொலைத் தொடர்புத் துறையை தனியார்மயமாக்குவதற்கு அதன் ஊழியர்கள்கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதையடுத்து அத் துறையில் சில முக்கியமாற்றங்களை மத்திய அரசு மேற்கொண்டது.

இதையடுத்து தொலைத் தொடர்பு சேவைத் துறை (டி.டி.எஸ்.) என்று புதிய துறையைமத்திய அரசு உருவாக்கியது. இந்த டி.டி.எஸ். துறையை மத்திய அரசு இப்போதுநிறுவனமாக்கியுள்ளது என்று மத்திய சட்ட அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

தொலைத் தொடர்பு சேவைத் துறை தனி நிறுவனமாக்கப்பட்டாலும், ஊழியர்களின்நலன் பாதுகாக்கப்படும். இது தொடர்பாக ஊழியர்கள் சங்கங்களுடன் மத்திய அரசுபேச்சு நடத்தி வருகிறது.

ஊழியர்களின் கோரிக்கையான நிதி ஆதாரம், ஓய்வூதியம், பணி பாதுகாப்புஆகியவை பற்றி அமைச்சர்கள் குழு விவாதித்து வருகிறது என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+