For Daily Alerts
Just In
ஓபியம் கடத்தியவருக்கு 10 ஆண்டு கடுங்காவல்
சென்னை:
ஒபியம் போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட பாண்டிச்சேரியைச்சேர்ந்த நபருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் பத்து ஆண்டு கடுங்காவல், ரூ. 1 லட்சம்அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தது.
பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர் ராஜன் (32). இவர் கடந்த ஆண்டு தமிழகத்தின்விழுப்புரம் நகரில் போதைப் பொருள் தடுப்புப் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.இவரிடமிருந்து 200 கிராம் ஓபியம் போதைப் பொருளைப் போலீஸார் பறிமுதல்செய்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய தஞ்சாவூர் போதைப் பொருள் தடுப்பு வழக்குகள்நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம், ராஜனுக்கு பத்து ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம், அதைக் கட்டத் தவறினால், மேலும் 2 ஆண்டு கடுங்காவல்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
யு.என்.ஐ.
Story first published: Sunday, September 3, 2000, 5:30 [IST]