வன்னியர் மாநாடு: வாழப்பாடி
சென்னை:
தமிழக ராஜிவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி வரும் 6ம் தேதி சென்னையில் வன்னியர் விழிப்புணர்வு மாநாடுநடத்துகிறார். இதையடுத்து பாட்டாளி மக்கள் கட்சியினர் வாழப்பாடியார் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
வன்னியர்களின் ஒற்றுமையை வாழப்பாடி ராமமூர்த்தி சிதறடிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பா.ம.க தலைவர் ஜி.கே மணி, புதா. இளங்கோவன் எம்.பி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில்,
வன்னியர்கள் மத்தியில் உள்ள ஒற்றுமையை சீர்குலைக்க வாழப்பாடி ராமமூர்த்தி முயல்கிறார்.
வன்னியர்கள் ஒன்றுபட்டு உரிமைபெற உள்ள நிலையில் குழப்பத்தை உருவாக்கி சிதறடிக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்.
சூரியனுக்குள் அக்னிகுண்டம் பொறிக்கப்பட்ட சின்னத்துடன் வன்னியர் விழிப்புணர்வு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த மாநாட்டிற்கு வன்னியர் அல்லாதவர்களையும் மற்ற கட்சிக்காரர்களையும் அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வன்னியர் மாநிாட்டிற்கு வன்னியர் அல்லாதவர்கள் மற்ற கட்சிக்காரர்கள் கூட்டத்தை காட்டி மாநிாடு நிடத்துவது விந்தையிலும்விந்தையாகஉள்ளது.
இதையெல்லாம் புந்து கொண்டு வன்னியர்கள் மிகவும் உஷாராகவும், விழிப்போடும் , டாக்டரய்யா (ராமதாஸ்) பின்னால் ஒன்றுசேர்ந்து உள்ளார்கள். டாக்டர் அய்யா பின்னால் ஒன்று சேர்ந்துள்ள இந்த நலையை எந்த நலையிலும் பிக்க டியாது. மாற்றடியாது. இவ்வாறு பா.ம.க தலைவர்கள் கூறியுள்ளனர்.