அடக்கம் செய்யப்படாமல் அநாதரவாகக் கிடக்கும் பாக். பாடகியின் உடல்
இஸ்லாமாபாத்:
லண்டனில் இரண்டு வாரங்களுக்கு முன்பு இறந்த பிரபல பாகிஸ்தான் பாப் பாடகிநஸியா ஹசனின் உடல், வாரிசு யார் என்ற சட்டப் பிரச்சினை காரணமாக அடக்கம்செய்ய முடியாமல் அநாதரவாகக் கிடக்கிறது.
நஸியா ஹசன், லண்டனில் வசித்து வந்தாலும் கூட அடிக்கடி இந்தியாவுக்கு வந்துகச்சேரிகள் நடத்துவது வழக்கம். இந்தியாவுக்கு வந்த பாட ஆரம்பித்த பிறகுதான்அவர் மேலும் புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹசன் இரண்டு வாரங்களுக்கு முன்பு லண்டனில் இறந்தார். அவருக்கு ஒரே மகள்தான்.கணவரிடிருந்து விவாகரத்து கேட்டு அவர் லண்டன் கோர்ட்டில் விண்ணப்பித்திருந்தார்.இதுதான் இப்போது பிரச்சினையைக் கிளப்பியுள்ளது.
தான்தான் வாரிசு. எனவே சொத்துக்களை தனக்கேத் தர வேண்டும் என்று ஹசனின்கணவர் கோர்ட்டில் மனு செய்துள்ளார். இதுபோல பல உறவினர்களும் வாரிசு உரிமைகோரி மனு செய்துள்ளனர்.
ஹசன் பல சொத்துக்களை இன்சூர் செய்து வைத்திருப்பதால், சரியான வாரிசுதெரியாமல் உடலை அடக்கம் செய்ய இன்சூரன்ஸ் கம்பெனி அனுமதிக்காது. எனவேஉடல் அடக்கம் செய்யப்படாமல் அப்படியே உள்ளது.