For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரை தர்காவில் கொடுமைக்குள்ளாகும் மன நோயாளிகள்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரை கோரிப்பாளையத்தில் சுல்தான் அலாவுதீன் தர்காவில் கொடுமைக்குள்ளாக்கப்பட்டு வரும் மன நோயாளிகள் குறித்துவிசாரிக்க மனித உரிமைக் கமிஷன் சிறப்புக் குழுமை அமைத்துள்ளது.

இங்கு உள்ள இல்லத்தில் மனநோயாளிகளை இடைவெளியின்றி தூண்களிலும், கல்லிலும் கட்டிவைத்து இருப்பதாகவும்,மீறுபவர்களை அடித்து சித்ரவதை செய்யப்படுவலதாகவும் தேசிய மனித உரிமைக்குழுவுக்கு மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரிப்பேராசிரியர் ஒருவர் புகார் அனுப்பியிருந்தார்.

இதையடுத்து இந்த புகார் குறித்து விசாரித்து அறிக்கை தருமாறு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனித உரிமைக் கமிஷன்உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு நடத்தி மனித உரிமைக் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், தர்காவில் ஆய்வு நடத்தியபொழுது ஆண்களும், பெண்களுமாக 79 பேர் இருந்தனர். அவர்களில் 39 பேர் மனநிலைபாதிக்கப்பட்டவர்கள். 29 பேர் ஆண்கள், 10 பேர் பெண்கள்.

மனநிலை பாதிக்கப்பட்ட 12 பேரை கட்டிவைத்து கூரை வேயப்பட்ட கொட்டகையில் அடைத்து வைத்துள்ளனர். 10 பெண்களைகட்டி வைத்திருந்தனர்.

இந்த இல்லத்திற்கு அரசு மருத்துவமனைகளைச் சேர்ந்த மனநோய் மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், சிறப்பு மகளிர்நோய் மருத்துவர்கள் அடங்கிய குழு சென்று 79 நிாேயாளிகளையும் பரிசோதித்தது. அவர்களில் 34 பேர் மன நோயால்பாதிக்கப்பட்டவர்கள். பிற நோயாளிகள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள்.

55 பேருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவை என்று தெரியவந்தது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தர்காவின் அமைப்பு, தங்கும் வசதி பற்றியும் விபரமாக விசாரித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மனிதஉரிமை கமிஷனுக்கு விபரம் அனுப்பப்பட்டது.

மாவட்ட கலெக்டரின் அறிக்கை மூலம் உண்மையை அறிந்து கொண்ட மனித உரிமைக் கமிஷன், இந்தக் கொடுமைகள் குறித்துமேலும் ஆராய சிறப்பு நிபுணர் குழுவை அமைத்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X