For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கணவனை திருத்த தீக்குளித்த மனைவியும், காப்பாற்ற முயன்ற கணவனும் சாவு

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

குடிகாரக் கணவனைத் திருத்த தீக்குளித்த பெண்ணும், மனைவியைக் காப்பாற்றச் சென்ற கணவனும் இறந்தனர்.

கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பழனிச்சாமி (36). இவரது மனைவி சுசீலா (28).ஆட்டோ டிரைவர் பழனிச்சாமி தினம் குடித்து விட்டு மனைவியுடன் சண்டை போட்டு வந்தார்.

சுசீலாவும், தனது கணவருக்கு குடியை நிறுத்த அறிவுரை கூறி வந்துள்ளார். ஆனால் பழனிச்சாமி குடியைநிறுத்தவில்லை. எனவே குடிகாரக் கணவனைத் திருத்த, தீக் குளிக்கப் போவதாகக் கூறிய சுசீலாமண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதனைப் பார்த்த பழனிச்சாமி மனைவியைக் காப்பாற்ற முயன்றார். இதில் அவரும் தீக்காயமடைந்தார்.இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்துவிசாரணை செய்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X