வெளிநாட்டில் சொத்து கிடையாது .. கூறுகிறார் ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வெளிநாடுகளில் எந்தவிதமான சொத்தும் எனக்குக் கிடையாது என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஸ்பிக் ஊழல் வழக்கு தொடர்பாக ஜெயலலிதா திங்கள்கிழமை தனி கோர்டில் ஆஜரானார். காலை 10.40 மணிக்கு நீதிமன்றத்திற்கு வந்தவர் 10.55மணிக்கு வீட்டிற்கு திரும்பினார். அதற்கு முன் நீதிமன்ற வாசலில் நிருபர்களை சந்தித்தார்.

ஜெயலலிதா கூறுகையில், சந்தன வீரப்பன் விவகாரத்தில் நான் கூறிய கருத்துக்களை உறுதிப் படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுஅமைந்துள்ளது. இந்தப் பிரச்சனையில் இருந்து மக்களை திசை திருப்பும் நாக்கத்தோடு லண்டனில் நான் நட்சத்திர ஹோட்டல் வாங்கியுள்ளதாக என் மீது பொய்வழக்கு தொடர்ந்துள்ளனர்.

என் மீது ஏற்கனவே முதலாவது தனி நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த நீதிபதியின் அனுமதியின் பேரில் தான்மேற்கொண்டு விசாரணைக்கு லண்டன் சென்றனர்.

சட்டப்படி வெளிநாட்டு விசாரணை முடிந்தவுடன் சொத்து குவிப்பு வழக்கு நடந்து வரும் முதலாவது தனி நீதிமன்றத்தில் தான் கூடுதலாக குற்றப்பத்திரிகைதாக்கல் செய்யவேண்டும். ஆனால் இவர்கள் அப்படி செய்யாமல் என் மீது தனி வழக்காக அதை தொடர்ந்துள்ளனர். இப்படி செய்துள்ளது சட்டத்துக்குமுரணானது. எதிரானது. சட்டப்படி செல்லாது.

எனக்கு எந்த வெளிநாட்டிலும் எந்தவிதமான சொத்தும் கிடையாது. இப்பொழுது என் மீது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இந்த வழக்கு, மற்றும் ஒருபொய் வழக்காகும். தனியாக இப்படி போட்டிருப்பது சட்டப்படி தவறு ஆகும் என்று ஜெயலலிதா கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+