15-ம் தேதிக்குள் ராஜிநாமாவா ... சே..சே என்கிறார் ஜோதிபாசு
கல்கத்தா:
மேற்கு வங்க முதல்வர் பதவியிலிருந்து செப்டம்பர் 15-ம் தேதி தாம் ஓய்வு பெறுவதாக இன்டர்நெட்டில் வெளியான செய்தியை ஜோதி பாசு மறுத்துள்ளார்.
87 வயதான ஜோதிபாசு, உடல் நிலை காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விரைவில் ஓய்வுபெற விரும்புவதாக சமீபத்தில் தெரிவித்தார். ஆனால்,எப்போது ஓய்வுபெற உள்ளார் என்பதை அவர் அறிவிக்கவில்லை.
இந் நிலையில், இன்டர்நெட் தளம் ஒன்று செப்டம்பர் 15-ம் தேதி ஜோதி பாசு ஓய்வு பெற உள்ளார் என்று செய்தி வெளியிட்டது. இதை ஜோதி பாசுமறுத்துள்ளார்.
முதல்வர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வது குறித்தோ, ஓய்வு பெறுவது குறித்தோ நான் எந்த இன்டர்நெட் செய்தித் தளத்துடனும் பேசவில்லை என்று அவர்தெரிவித்தார்.
எனக்கு எதிராக தூண்டிவிடப்படும் பிரசாரம் இது. அச் செய்தியில் எந்த உண்மையும் இல்லை. நான் ஓய்வுபெற விரும்புவது உண்மைதான். கடந்த டிசம்பர்மாதம் முதலே நான் அதைக் கூறி வருகிறேன்.
ஆனால், நான் சார்ந்துள்ள மார்க்சிஸ்ட் கட்சி நான் முதல்வர் பதவியில் தொடரவேண்டும் என்று விரும்பியது. அதனால், முதல்வர் பதவியில் நான்தொடர்கிறேன்.
எத்தனையோ முறை இதை நான் தெரிவித்துவிட்டேன். நான் எப்போது ஓய்வு பெறுகிறேனோ அப்போது எல்லோருக்கும் தெரிவிப்பேன் என்றார்ஜோதிபாசு.
ஐ.ஏ.என்.எஸ்.