மத்திய அரசை நாட மாட்டோம் ... கர்நாடகம்
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரை மீட்பது தொடர்பாக இப்போதைக்கு மத்திய அரசின் உதவிநாடப்பட மாட்டாது என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு 6 வாரங்கள் ஆகி விட்டன. அவரை மீட்பதற்காகநக்கீரன் ஆசிரியர் கோபால் மூன்றாவது முறையாக காட்டுக்குச் சென்றுள்ளார்.இதற்கிடையே, ராஜ்குமாரை விடுவிக்க ரூ. 50 கோடி தர வேண்டும் என்ற புதியகோரிக்கையை வீரப்பன் விடுத்துள்ளதாக பேச்சு எழுந்தது.
மேலும், 51 தடா கைதிகளை விடுவிப்பதை சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில்கர்நாடக அரசை, சுப்ரீம்கோர்ட் நீதிபதி பரூச்சா கடுமையாக சாடியிருந்தார்.
இந்த நிலையில், திங்கள்கிழமை பெங்களூரில், கர்நாடக அமைச்சரவையின் அவசரக்கூட்டம் கூட்டப்பட்டது. கூட்டம் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் மாநில செய்தித்தொடர்புத் துறை அமைச்சர் சந்திரசேகர் கூறுகையில், நக்கீரன் கோபாலின் முயற்சிதோல்வியடைந்தால் மட்டுமே பிற வழிகள் குறித்து யோசிக்கப்படும்.
ஜூலை 30-ம் தேதி கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமார் விரைவில் விடுதலைசெய்யப்படுவார் என்று நம்புகிறோம்.
ராஜ்குமார் கடத்தல் தொடர்பாக மத்திய அரசுடன் தொடர்ந்து தொடர்புகொண்டுள்ளோம். ராஜ்குமாரை மீட்பது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகுறித்தும் மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி வருகிறோம்.
ராஜ்குமார் விவகாரம் தொடர்பாக தமிழக, கர்நாடக அரசுகள் எடுத்து வரும்நடவடிக்கைகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் முழு ஒப்புதல் தரப்பட்டது.
ராஜ்குமாரை மீட்பதற்கு வேறு வழி ஏதும் உள்ளதா என்பது குறித்து மாநில அரசுயோசித்து முடிவு செய்யும். வீரப்பனைச் சந்தித்து விட்டு கோபால் வெளியே வந்தபிறகுதான் இதுகுறித்து முடிவு செய்வோம் என்றார் சந்திரசேகர்.
யு.என்.ஐ.