18-ம் தேதி புதிய கட்சி தொடங்கும் 8 மாஜி மந்திரிகள்
சென்னை:
தமிழகத்தில் அரசியல்கடசிகளின் எண்ணிக்கையில் வரும் 18ம் தேதி முதல் மேலும் ஒன்று சேர உள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் எஸ்.டி சோமசுந்தரம், பண்ருட்டி ராமச்சந்திரன், வி.வி.சாமிநாதன், ராஜாமுகமது, அருணாசலம்ஆகியோர் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில்,
வரும் 15-ம் தேதி புதுக்கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்தோம். அது தள்ளி வைக்கப்படுகிறது. வரும் 18-ம் தேதிவிஜயசேஷமஹாலில் காலை 9 மணிக்கு எங்களது தொண்டர்களை கூட்டி புதுகட்சி பற்றி அறிவிக்க இருக்கிறோம்.
எங்கள் புதுக்கட்சியின் கொள்கைகள் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகிய மூன்று தலைவர்களும் நாட்டுக்கு வகுத்தளித்தகொள்கை கோட்பாட்டின்படி வகுக்கப்படும்.
எங்கள் கட்சியில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னுசாமி, குழந்தைவேலு ஆகியோரும் உள்ளனர். நாங்கள் எட்டு பேரும்நேர்மையான, நாணயமாக சாதி- மதம் பாராமல் அமைச்சராக பணியாற்றி தமிழக மக்களுக்கு தொண்டு செய்துள்ளோம்.
எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கிடையாது. நிர்வாகத்தில் திறமையாக பணி செய்து இருக்கிறோம். எங்கள் திறமைவீணாகக்கூடாது என்பதாலும், சாதி சங்கங்கள் மூலம் தமிழகம் பிரியக்கூடாது என்பதாலும் நல்ல ஆட்சியைஏற்படுத்துவதற்காகவும் புதிய கட்சி துவங்கப்படுகிறது.
கட்சியின் பெயர், கொடி ஆகிய விபரங்கள் விஜயசேஷமஹாலில் அறிவிக்கப்படும். வரும் சட்டமன்றத் தேர்தலில் நாங்கள்போட்டியிடுவோம். த.மா.காவுடன் கூட்டணி அமைப்போமா என்பது பற்றியெல்லாம் தேர்தல் சமயத்தில் தான்முடிவெடுப்போம். தேர்தலில் நல்லவர்களை நிறுத்துவோம்.
இவ்வாறு அவர்கள் அமைச்சர்கள் கூறினார்கள்.
பண்ருட்டி ராமச்சந்திரன், தனது மக்கள் நலஉரிமைக்கழகத்தை புதிய கட்சியுடன் இணைக்கிறார் என்றும் அறிவித்தனர்அமைச்சர்கள்.