ஆப்கன் நகர் மீது தலிபான்கள் கடும் தாக்குதல்
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானில் எதிர்க்கட்சித் தரப்பினர் வசம் உள்ள முக்கிய நகர் மீது தலிபான்படை வீரர்கள் கடும் தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
தலிபான்களுக்கு எதிரான மசூத் தலைமையிலான படையினரின் செய்தித்தொடர்பாளர் முகம்மது ஹபீல் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆப்கானிஸ்தானின்வடக்குப் பகுதியில் உள்ள தலூக்குன் என்ற நகர் மீது தலிபான் வீரர்கள் கடுமையாகதாக்குதல் நடத்தினர். திங்கள்கிழமை இத்தாக்குதல் நடந்தது.
தலிபான் வீரர்கள் ஓரளவுக்கு முன்னேறினர். இருப்பினும் எங்களது வீரர்கள்அவர்களைத் தடுத்து நிறுத்தி விட்டனர் என்றார் அவர்.
முன்னாள் சோவியத் யூனியனிலிருந்த் தஜிகிஸ்தான் நாட்டு எல்லையில் தலூக்குன் நகர்உள்ளது. மசூத் படையினரின் கையில் உள்ளது. பாஞ்சஷர் பள்ளத்தாக்குப் பகுதியில்மிகவும் முக்கியமான நகர் இது.
ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதி தலிபான் மதவாத படையினரின் கையில் உள்ளதுகுறிப்பிடத்தக்கது. சில பகுதிகளில் மசூத் படையினர் வசம் உள்ளது.












Click it and Unblock the Notifications