For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லாக்கப்பில் இறந்த அமைச்சரின் உறவினர் .. பஞ்சாபில் பதற்றம்

By Staff
Google Oneindia Tamil News

சண்டிகர்:

பஞ்சாப் மாநிலத்தில் அமைச்சர் ஒருவரின் உறவினர் போலீஸ் நிலைய லாக்கப்பில்இறந்ததையடுத்து மலேர்கோட்லா என்ற நகரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சர்வான் சிங்கின்உறவினர் பல்பீர் சிங் (23). சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி சனிக்கிழமை இரவுபோலீசாரால் கைது செய்யப்பட்டார். போலீஸ் நிலையத்தில் வைத்து அவர் இறந்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவியது. பெரும் திரளான மக்கள போலீஸ்நிலையம் முன்பு கூடி விட்டனர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி அவர்களைக்கலைத்தனர்.

பல்பீரை கைது செய்த ஏழு போலீசாரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைதுசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக மலேர்கோட்லா டி.எஸ்.பி. சரீந்தர் சிங் சைனிகூறியுள்ளார்.

7 போலீஸார் மீதும் இந்திய குற்றப்பிரிவு சட்டம் 302 மற்றும் 34 ஆகிய பகுதிகளின் கீழ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பல்பீர் சாவுக்கு போலீஸாரே காரணம் என்று அமைச்சர் சர்வான் சிங்புகார் கூறியுள்ளார். பல்பீர் சிங்கின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சங்கரூர்மாவட்டத்திற்கு வந்த அமைச்சர் கூறுகையில், தனது உறலினர் மீது போலீசார் பொய்வழக்குப் போட்டு கொடுமைப்படுத்தியுள்ளனனர்.

அதன் பின் அவரை மருத்துவமன்ைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர்இறந்தே கொண்டு வரப்பட்டார் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். எனவே, பல்பீர் சிங்போலீசாராலேயே கொல்லப்பட்டார் என்றார்.

தலித் சங்கம் ஒன்றின் தலைவரான பல்பீர் சிங், அகாலி தலைவராகவும் இருந்துவந்தார். ஜலந்தர் மாவட்டத்திலுள்ள பிலாலூர் தொகுதியிலிருந்து 1972-ம் ஆண்டுமுதல் தொடர்ந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருக்கிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X