எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள்- தினகரன்
தேனி:
எங்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அதைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம் என அதிமுக எம்.பியும்ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலாவின் தம்பியுமான தினகரன் கூறினார்.
ஏற்கனவே பல வழக்குகளில் சிக்கி பாதி நேரம் சாட்சிக் கூண்டில் நின்று வருபவர் தினகரன். ஜெயலலிதாபேரவையின் மாநிலச் செயலாளராகவும் உள்ளார்.
தேனியில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பேசுகையில், மண விழாவில் அரசியல் பேசக்கூடாது. ஆனால், தமிழகத்தில்நடந்து வரும் சரியில்லாத திமுக ஆட்சி குறித்து திருமண நிகழ்ச்சியில் கூட மக்களிடையே பேச வேண்டியகாலகட்டம் ஏற்பட்டுள்ளது.
பொய் வழக்குப் போடுவதையே திமுக அரசு முழு அரசியல் பணியாக செய்து வருகிறது. இன்று கூட தேனிவந்தபோது ஜெயலலிதா மீதும், என் மீதும் புதிய வழக்குப் போட்டுள்ளதை பத்திரிக்கைகள் மூலமாக படித்துத்தெரிந்து கொண்டேன்.
ஜெயலலிதா கட்டளையிட்டார். இதனால் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பியானேன். என்னைபெரியகுளம் தொகுதி மக்கள் பாராட்டுவதை பார்த்து கருணாநிதிக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும்பொறுக்கவில்லை. இதனால் தான் வழ்ககுகள் என்ற பெயரில் புரளிகளை கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கருணாநிதி.
அதிமுக ஒரு ஆல மரம். அதில் ஒரு துரும்பைக் கூட எதிரிகள் அசைக்க முடியாது என்றார் தினகரன்.












Click it and Unblock the Notifications