ஜெயாவின் லண்டன் ஹோட்டல் வழக்கு விசாரணை தீவிரமாகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

லண்டனில் ஜெயலலிதா வாங்கியுள்ளதாகக் கூறப்படும் ஹோட்டல் குறித்த வழக்கு விசாரணை தீவிரமடைந்து வருகிறது.

அ.தி.மு.க ஆட்சிக் கால ஊழல் வரலாறுகளின் தொடர்ச்சியாக, லண்டனிலும் அதைச் சுற்றியுள்ள தீவுகளிலும் இரண்டு ஸ்டார் ஹோட்டல்களை ஜெயலலிதா ரூ. 248கோடிக்கு வாங்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

கடந்த 2-ம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ஜெயலலிதா, அ.தி.மு.க எம்.பி தினகரன் இருவர் மீதும் இந்த வழக்கை பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஏற்கனவே இரண்டு முறை லண்டன் சென்று திரும்பியுள்ளது தமிழக காவல்துறை அதிகாரிகள் டீம். அப்பொழுது இந்தவழக்கு தொடர்பான ஏராளமான ஆவணங்களையும், லண்டன் அதிகாரிகளிடம் இருந்து பெற்று வந்தனர்.

லண்டனில் உள்ள ஹோட்டல்கள், மற்றும் சில சொத்துக்களையும் வீடியோ படமாகவும் எடுத்து வந்துள்ளனர். மேலும் விசாரணை நடத்த அக்டோபர் மாதம்மறுபடியும் லண்டன் செல்கிறது இந்த டீம்.

திரும்பி வந்தவுடன், ஜெயலலிதா , தினகரன் இன்னும் சிலர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வார்கள் எனக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+