நியமன எம்.பி.ஆகிறார் வரதராஜப் பெருமாள்
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றத்துக்கு அதிபர் சந்திரிகாவின் மக்கள் கூட்டணிக் கட்சியின் சார்பில் நியமன உறுப்பினராக வடகிழக்கு மாகாண முன்னாள் முதல்வர்வரதராஜப் பெருமாள் நியமிக்கப்பட உள்ளார்.
இத் தகவலை மக்கள் கூட்டணிக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 1998-ம் ஆண்டு வடகிழக்கு மாகாணத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றுஅம் மாகாண முதல்வராகப் பதவியேற்றார் வரதராஜப் பெருமாள்.
1990-ம் ஆண்டு தான் ஆட்சி செலுத்தி வந்த வடகிழக்கு மாகாணத்தை சுதந்திரப் பகுதியாக தன்னிச்சையாக அறிவித்துவிட்டு இந்தியாவுக்குத்தப்பியோடியவர் வரதராஜப் பெருமாள்.
9 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் தலைமறைவாக இருந்த அவர், இலங்கை நாடாளுமன்றத்துக்கு அக்டோபர் 10-ம் தேதி பொதுத் தேர்தல்நடைபெற உள்ளதை அடுத்து மீண்டும் இலங்கை திரும்பியுள்ளார்.
அதிபர் சந்திரிகா குமாரதுங்காவுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்ததை அடுத்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் இருந்து வரதராஜப் பெருமாள்சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதையடுத்து சந்திரிகாவின் ஆளும் மக்கள் கூட்டணிக் கட்சி சார்பில் நியமன உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக மக்கள் கூட்டணிக் கட்சிவட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கை நாடாளுமன்றத்தில் 225 இடங்களுக்கு 22 மாகாணங்களில் அக்டோபர் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 29 அரசியல் கட்சிகளின்சார்பில் 5,430 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த 5,430 பேரில் வரதராஜப் பெருமாளும் சுயேட்சையாகப் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications