For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு 1 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

இந்தியாவிலிருந்து 1 லட்சம் டன் சர்க்கரையை பாகிஸ்தான் இறக்குமதி செய்யும் என்றுஅந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானில் கடந்த கரும்பு அறுவடைப் பருவத்தில் 4 கோடியே 60 லட்சம் டன்எடையுள்ள கரும்பு பிழியப்பட்டது. அதிலிருந்து 25 லட்சம் டன் சர்க்கரை உற்பத்திசெய்யப்பட்டது.

ஆனால், பாகிஸ்தானின் உள்நாட்டுத் தேவைக்கு 30 லட்சம் டன் சர்க்கரை தேவை.இதையடுத்து பற்றாக்குறையைச் சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து சர்க்கரையைஇறக்குமதி செய்ய பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

குறிப்பாக இந்தியாவிலிருந்து சர்க்கரை இறக்குமதி செய்ய வியாபாரிகளுக்குபாகிஸ்தான் அரசு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை.

விலை குறைவாக இருக்கும்பட்சத்தில் இந்தியாவிலிருந்து 1 லட்சம் டன் சர்க்கரைஇறக்குமதி செய்யப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அப்படி இந்தியாவிலிருந்து சர்க்கரை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் முடிவு செய்யும்பட்சத்தில் அக்டோபர் 15-ம் தேதிக்குள் 25 ஆயிரம் டன் சர்க்கரையும், அக்டோபர்31-ம் தேதிக்குள் 75 ஆயிரம் டன் சர்க்கரையும் பாகிஸ்தானுக்கு இந்தியா ஏற்றுமதிசெய்யும்.

உள்நாட்டுத் தேவைக்காக பாகிஸ்தானின் தனியார் சர்க்கரை வியாபாரிகள் கடந்த மே18-ம் தேதி முதல் இதுவரை 2.55 லட்சம் டன் சர்க்கரை வெளிநாடுகளில் இருந்துஇறக்குமதி செய்துள்ளனர்.

செப்டம்பருக்குள் மேலும் 3.37 லட்சம் டன் சர்க்கரை பாகிஸ்தானுக்கு வந்து சேரும்என்று எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X