கிருஷ்ணாவுடன் பேச கருணாநிதி பெங்களூர் வருகிறார்
சென்னை:
அரசுத் தூதர் கோபால் மீண்டும் காட்டுக்குள் செல்வாரா என்பது குறித்து விவாதிப்பதற்காக தமிழக முதல்வர் கருணாநிதி 8 ம் தேதி பெங்களூர்வருகிறார்.
இத்தகவலை கருணாநிதியே தெரிவித்தார். பெங்களூர் வரும் அவர் வீரப்பன் விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் ஆலோசனைநடத்துவார். அதற்குப்பின் கோபால் மீண்டும் காட்டுக்குச் செல்வாரா என்பது குறித்துத் தெரிய வரும்.
வீரப்பன் நிபந்தனைகளில் ஒன்றான தமிழ்த் தீவிரவாதிகள் 5 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தத்தடையை மறுபரிசீலனை செய்யக் கோரி தமிழக அரசு புதன்கிழமை மனுத்தாக்கல் செய்வதாக இருந்தது. ஆனால் புதன்கிழமை அரசு மனுத்தாக்கல்செய்யவில்லை. ஏன் மனுத்தாக்கல் செய்யவில்லை என்பது குறித்து விவரம் எதுவும் தெரியவில்லை.
முன்னதாக அ.தி.மு.க.விலிருந்து பிரிந்து சென்ற பலர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கருணாநிதி நிருபர்களிடம் இவ்வாறு கூறினார்.