தீவிரவாதிகள் தாக்குதலில் போலீஸ்காரர் பலி

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரிலுள்ள எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை அலுவலகம் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தினர்.இதில், ஒரு தலைமைக் காவலர் இறந்தார். 4 போலீஸ்காரர்கள் படுகாயமடைந்தனர்.

ஸ்ரீநகர், கன்யார் பகுதியில் ஷிராஸ் என்ற சினிமா தியேட்டர் உள்ளது. 1990ம் ஆண்டில் தீவிரவாதிகள் விடுத்த மிரட்டலையடுத்து அது மூடப்பட்டது. அந்தஇடத்தில், எல்லைப் பாதுகாப்புப் படையின் 49-வது பட்டாலியன் இயங்கி வந்தது. இப்பகுதியின் தலைமை அலுவலகமாகவும் அது இருந்தது.

செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் இந்த அலுவலகம் மீது தீவிரவாதிகள் கிரனேட் வெடிகுண்டுகளை வீசித் தாக்கினர். இதில், 5 பேர்காயமடைந்தனர். அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தலைமைக் காவலர் தேவேந்திர சிங் இறந்தார்.

தாக்குதல் சம்பவத்தையடுத்து போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஜமைத் உல் முகைதீன் அமைப்புத்தான் இந்தத் தாக்குதல் சம்பவத்திற்குக் காரணமாக இருக்கக் கூடும்என்று கருதப்படுகிறது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+