கர்நாடக முதல்வரைச் சந்திக்க விரைகிறார் கோபால்
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரைப் பார்த்து விட்டு சென்னை திரும்பியுள்ள நக்கீரன் ஆசிரியர்கோபால், கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் ராஜ்குமார் குடும்பத்தினரைச்சந்திப்பதற்காக பெங்களூர் வருகிறார்.
ராஜ்குமாரை விடுவிப்பது தொடர்பாக மூன்றாவது முறையாக நக்கீரன் கோபால்,காட்டுக்குச் சென்றிருந்தார். இம்முறை ராஜ்குமாருடன்தான் வருவேன் என்றுகூறியிருந்த கோபால், வீரப்பன் மிகவும் பிடிவாதமாக இருப்பதால், ராஜ்குமார்இல்லாமல் தனியாகவே திரும்பி வந்துள்ளார்.
புதன்கிழமை காலை சென்னை திரும்பிய கோபால், தமிழக முதல்வர் கருணாநிதியைச்சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வீரப்பன் பிடிவாதமாகஇருக்கிறான். கோரிக்கைகள் நிறைவேறினால்தான் ராஜ்குமார் விடுதலை என்றுகூறுகிறான் என்றார்.
கருணாநிதியைச் சந்தித்த கையோடு பெங்களூர் வருகிறார் கோபால். ராஜ்குமார்மனைவி பர்வதம்மா மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்திக்கிறார். அப்போது,ராஜ்குமாரைச் சந்தித்தது குறித்தும், வீரப்பன் கூறுவது குறித்தும் தெரிவிப்பார் என்றுதெரிகிறது.