சிறை செல்லத் தயாராகும் தமாகா தலைவர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் 27-ம் தேதி நடக்கிறது.

சிமென்ட் விலை உயர்வு, விவசாயிகள், நெசவாளர்கள் பிரச்சினை என்று பலகோரிக்கைகளுடன் களம் இறங்குகிறார்கள் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்கள்,தொண்டர்கள்.

மூப்பனார், சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் என தமாகாவின் முக்கியப் பிரமுகர்கள்அனைவரும் சிறை செல்லத் தயாராகி விட்டார்கள். தமிழகம் முழுவதும் குறைந்ததுஒரு லட்சம் தொண்டர்கள் சிறையில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாகஇருக்கிறார்கள்.

1996-ம் ஆண்டு கட்சிஆரம்பித்தது, காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ஒரு புரட்சியைஉருவாக்கியது போல, இப்போதும் ஒரு புரட்சி வேண்டும். அதன் மூலமாகத்தான்தமாகாவின் அரசியல் எதிர்காலம் தூக்கி நிறுத்தப்படும் என்பதில் உறுதியாகஇருக்கிறார்கள்.

இந்தப் போராட்டத்தை எப்படி வெற்றிகரமாக நடத்துவது என்று கடந்த மூன்றுநாட்களாக பேசி முடிவெடுத்திருக்கிறார்களாம்.

1971-ம் ஆண்டு காமராஜர் நடத்திய பத்து அம்சக் கோரிக்கை போராட்டம் மாதிரிவெற்றிகரமாக செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்றும் உறுதியெடுத்திருக்கிறார்கள்தமாகா தலைவர்கள்.

போராட்டம் என்று முன்கூட்டியே போலீஸாரால் கைது செய்யப்பட்டால்,தலைமறைவாகவும் இருந்து செயல்பட வேண்டும் என்றும் திட்டமிட்டிருக்கிறார்கள்தமாகா தலைவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+