பெங்களூரில் இன்று மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம்
பெங்களூர்:
கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையில் மீண்டும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் சனிக்கிழமை பெங்களூரில் நடக்கிறது.
நடிகர் ராஜ்குமாரை மீட்கும் முயற்சியில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை குறித்து வெள்ளிக்கிழமை தமிழக முதல்வர் கருணாநிதியும், கர்நாடக முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணாவும் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்கள்.
அந்த ஆலோசனை குறித்த விவரங்களை அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளார் கிருஷ்ணா. அதன்படி, பிற்பகல் 12 மணிக்குமுதல்வர் இல்லமான கிருஷ்ணாவில் இந்தக் கூட்டம் நடக்கிறது.
இது, நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டது முதல் நடத்தப்படும் 4 வது அனைத்துக் கட்சிக் கூட்டமாகும். சனிக்கிழமை நடக்கும் அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் ராஜ்குமார் மீட்புக்கு, புதிய அணுகுமுறைகளை உபயோகப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.