ரூ. 43 லட்சம் மோசடி செய்தவர் கைது
சென்னை:
போலி நிறுவனம் நடத்தி 43 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்தவரை போலீசார்கைது செய்துள்ளனர்.
சென்னை, அசோக் நகர் 11-வது அவென்யு பகுதியைச் சேர்ந்தவர் கே.என்.சடகோபன். இவர் மண்ணடி அய்யப்ப ஷெட்டி தெருவில் விக்னேஷ் கார்ப்பரேஷன்என்ற பெயரில் ஒரு நிறுவனம் நடத்தி வந்தார்.
இந்த நிறுவனத்தின் மூலம் ஜின்டால் நிறுவன பொருட்களை விநியோகம் செய்வதாகவிளம்பரம் செய்தார். இதை உண்மை என்று நம்பிய பலர் அவரிடம் பணம் கட்டினர்.மேலும் தனது நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறியும் பலரிடம் பணம் வசூல்செய்தார்.
இது பற்றி ஏராளமானவர்கள் சென்னை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.போலீஸ் விசாரணையில் இது போன்று பலரிடமும் 43 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய்மோசடி செய்சுள்ளது தெரிய வந்தது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்துசடகோபனை கைது செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.












Click it and Unblock the Notifications