பாண்டி எம்.எல்.ஏ. பதவி பறிப்பு
பாண்டிச்சேரி:
கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் பாண்டிச்சேரி எம்.எல்.ஏ. மஞ்சினியின் பதவிபறிக்கப்பட்டது.
இதற்கான உத்தரவை பாண்டிச்சேரியின் சபாநாயகர் ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்தார்.
பாண்டிச்சேரியில் 1996-ம் ஆண்டு நடத்த பொதுத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் மஞ்சினி. 1999-ம் ஆண்டு டிசம்பர்மாதம் 9-ம் தேதி இவர் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி பாட்டாளி மக்கள் கட்சியில்இணைந்தார்.
இதையடுத்து மஞ்சினி பதவியை பறிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிதலைவர் விஸ்வநாதன் சபாநாயகரிடம் புகார் மனு கொடுத்திருந்தார்.
இவர் கொடுத்த புகாரின் பேரில் சபாநாயகர் நடவடிக்கை எடுத்து மஞ்சினியின்பதவியைப் பறித்தார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், விஸ்வநாதன் கொடுத்தபுகாரின்அடிப்படையில் கட்சி தாவல் அடிப்படையில் மஞ்சினி மீது சட்ட எண் 86 விதி3-ன் கீழ் நடவடிக்கை எடுத்து அவர் பதவி பறிக்கப்படுகிறது என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications