ஜெர்மனி தடகள அணியில் இந்தியப் பெண்
டெல்லி:
கல்கத்தாவை பூர்வீகமாகக் கொண்ட பெண், ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும்ஜெர்மனி அணியில் இடம்பெற்றுள்ளார்.
இந்த பெருமைக்குரியவர் சாந்தா கோஷ். இவரது தந்தையின் பூர்வீகம் கல்கத்தா. பலஆண்டுகளுக்கு முன்பே ஜெர்மனியில் குடியேறி விட்டனர். தடகள வீராங்கனையானசாந்தா, ஜெர்மனி அணியின் 4து400 தொடர் ஓட்ட அணியில் இடம் பிடித்துள்ளார்.
ஜெர்மனி அணி, சமீபத்தில் நடந்து முடிந்த ஐரோப்பிய கோப்பைப் போட்டியில்இரண்டாவது இடத்தைப் பிடித்தது. சிட்னி ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வெல்லும்என எதிர்பார்க்கப்படுகிறது.
1975-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி பிறந்தவர் சாந்தா. இவருக்கு இந்தியக்குடியுரிமையும் இருக்கிறது. இவரது தந்தை பிரபாத் கோஷ், கல்கத்தாவில் பிறந்துவளர்ந்தவர். தாய், ஆர்லென்டே ஜெர்மனியர். சாந்தா பிறந்து, வளர்ந்ததுஜெர்மனியில்தான்.
உளவியல் மாணவியமான சாந்தா, 1997-ம் ஆண்டு முதல் ஜெர்மன் தேசிய தடகளஅணியில் இடம் பெற்று வருகிறார். தற்போது சாந்தா இடம் பெற்றுள்ள அணியில்,முன்னாள் உலக ஜூனியர் சாம்பியன் கிரிட் பிரூயர், ஜெர்மன் தேசிய சாம்பியன் உடாரோலன்டர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இதுவரை இந்தியாவுக்கு சில முறைகளே சாந்தா வந்துள்ளார். இருப்பினும் சிலஉறவினர்கள் இன்னும் கல்கத்தாவிலேயே இருக்கின்றனர். கல்கத்தாவைச் சேர்ந்தஇரண்டு ஏழைச் சிறுமிகளின் கல்விச் செலவை சாந்தாதான் ஏற்றுக் கொண்டுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.
1997ம்ஆண்டு நடந்த ஐரோப்பிய கோப்பைப் போட்டியில், 22.80 விநாடிகளுக்குள்தனது தூரத்தை சாந்தா கடந்தார். அதில் அவரது அணிக்கு 2-வது இடம் கிடைத்தது.தற்போது 400 மீட்டர் ஓட்டத்திலும் சாந்தா கவனம் செலுத்தி வருகிறார். விரைவில்இதிலும் ஜெர்மனியின் முன்னணி வீராங்கனையாக வருவேன் என்று நம்பிக்கைத்தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் 1999-ல் நடந்த 100, 200 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் நான்காவதுஇடத்தைப் பிடித்தார். இந்த ஆண்டு நடந்த ஒலிம்பிக் தகுதிப் போட்டியில்மூன்றாவதாக வந்தார். இதையடுத்து ரிலே போட்டியில் கலந்து கொள்ள அவர் தகுதிபெற்றார்.
ஜெர்மனிக்குப் பெருமை சேர்ப்பதுடன் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க சிட்னிகிளம்பியுள்ள சாந்தாவை வாழ்த்துவோம்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications