மயக்க ஊசி போட்டு பெண்ணைக் கற்பழித்த டாக்டர்

Subscribe to Oneindia Tamil

பனைக்குளம் (ராமநாதபுரம்):

தனது மருத்துவமனையில் வேலை செய்து வந்த பெண்ணை, மயக்க ஊசி போட்டுக் கற்பழித்த சித்த டாக்டரைப் போலீஸார் கைது செய்தனர்.

மண்டபம் அகதிகள் முகாம் பகுதியில் அன்னை கிளினிக் என்ற மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கேயே மதுரை மீனாட்சி மிஷன்மருத்துவமனையின் தகவல் மையமும் உள்ளது. கிளினிக்கை சித்த வைத்திய டாக்டர் மணி என்பவர் நடத்தி வருகிறார். இவரிடம் ராமநாதபுர மாவட்டம்கொடிக்குளத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரின் மகள் சங்கீதா (17) வேலை செய்து வந்தார்.

இதற்கிடையே சங்கீதாவுக்கு சமீபத்தில் கையில் கொப்புளம் ஏற்பட்டது. இதைப் பார்த்த டாக்டர், அவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி மயக்க ஊசிபோட்டார். அவர் மயக்கமாக இருக்கும் போதே அவரைக் கற்பழித்துள்ளார்.

மயக்கம் தெளிந்த சங்கீதா, தனக்கு நேர்ந்த நிலை குறித்து அழுதார். இவ்விஷயம் குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மணிமிரட்டியுள்ளார். இதையடுத்து சங்கீதா அமைதியாக இருந்து விட்டார்.

இந்த நிலையில், 40 நாட்களில் சங்கீதா கர்ப்பமடைந்தார். இதையறிந்த டாக்டரின் மனைவி மேகலா, சங்கீதாவை ராமநாதபுரம் மருத்துவமனைஒன்றுக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்தார்.

சங்கீதாவின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுவதைக் கண்ட அவரது பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது சங்கீதா நடந்த விவரங்களைக் கூறினார்.இதையடுத்து போலீஸில் புகார் கூறப்பட்டது.

போலீஸார் வழக்குப் பதிவு செய்து டாக்டர் மணியைக் கைது செய்தனர். அவரது மனைவி மேகலா தலைமறைவாகிவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+