சென்னை - துபாய் நேரடி விமான போக்குவரத்து துவங்கியது
சென்னை:
பிரபல விமான நிறுவனமான "எமிரேட்ஸ் சென்னையில் இருந்து துபாய்க்கு நேரடிவிமான சர்வீஸை துவக்கியுள்ளது.
எமிரேட்ஸ் நிறுவனம் இந்தியாவில் டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் இருந்துவிமான சர்வீஸ் நடத்தி வருகிறது. தற்போது சென்னையில் இருந்து துபாய்க்கு நேரடிவிமான சர்வீஸை புதிதாக துவங்கியுள்ளது.
இதுகுறித்து துபாய் நாட்டின் இளவரசரும், எமிரேட்ஸ் நிறுவனத்தின் தலைவருமானஷேக் அகமது சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த 1985ம் ஆண்டுஎமிரேட்ஸ் நிறுவனம் தனது விமான சேவையை துவக்கியது.
முதலில் மூன்று இடங்களில் இருந்து விமானங்களை இயக்கியது. தற்போது 52இடங்களில் விமான சேவையை செய்து வருகிறது இந்த நிறுவனம்.
துபாய் நாட்டில் வாழும் இந்தியர்கள், குறிப்பாக சென்னைக்கு வரும் பயணிகளுக்குவசதியாக இந்த புதிய சர்வீஸ் துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவுடனானஎங்கள் நட்புறவு மேலும் வலுப்பெறும் என்றார்.