இந்தியாவுடன் உறவு நன்றாக உள்ளது ... இலங்கை அமைச்சர்
வாஷிங்டன்:
இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையேயான உறவு நன்றாக உள்ளது என்று ஐ.நா.மில்லினியம் மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை வெளியுறவுத் துறைஅமைச்சர் லட்சுமண் கதிர்காமர் தெரிவித்தார்.
இலங்கை அதிபர் சந்திரிகா சார்பில் ஐ.நா.மாநாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு லட்சுமண் கதிர்காமர் பேசியதாவது:
இலங்கையில் தனிநாடு கேட்டு விடுதலைப்புலிகள் கடந்த 17 வருடங்களாகப் போராடி வருகிறார்கள். இதனால் ஒவ்வொரு நாளும் ராணுவ வீரர்களும்,புலிகளும் பலிகடா ஆக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்கள் கேட்பது போல் தனிநாடு கொடுப்பது என்பது நடக்காத காரியம். தனிநாடு கேட்டுப் போராடும் புலிகளுக்காக இந்தியா பச்சதாபம்காட்ட வேண்டிய அவசியம் ஏதுமில்லை.
இதுவரை இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான உறவு மிகவும் நன்றாக உள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக இந்த உறவு வலுப்பட்டுள்ளது.இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை.
இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையேயான எப்படி உள்ளதோ அதே போல் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவில் எந்தபிரச்சனையும் இல்லை. இலங்கைக்கு இந்தியா பல வழிகளில் உதவி புரிந்து வருகிறது.
இந்தியாவிலிருந்து விடுதலைப் புலிகளக்கு ஆயுதங்கள் வருகின்றன. ஆனால் நீண்ட கடற் பகுதியைக் கொண்ட இந்தியா மற்றும் தமிழக அரசுகளினால்,கடற்கரைப் பகுதியை முழுவதும் கண்காணிக்க முடியாது.
தமிழ்நாட்டில் உள்ள இரண்டு, மூன்று எம்.பி.க்களை வைத்து கட்சி நடத்தும் ம.தி.மு.க.மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகள் விடுதலைப்புலிகளுக்குஆதரவாக அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. அரசியல் லாபம் தேடும் வகையில் அவர்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்.
பிரதமர் வாஜ்பாயிடமும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கிடமும் அவர்கள் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், தனிநாடு கோரிக்கையைநிறைவேற்றக் கோரியும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் வாஜ்பாயும், ஜஸ்வந்த் சிங்கும் இதுபோன்ற சூழ்நிலைகளை மிகவும் சாதுர்யமாகச்சமாளித்து வருகிறார்கள்.
தற்போது தமிழக மக்களே புலிகள் மிகவும் ஆபத்தானவர்கள். அபாயகரமானவர்கள் என்று புரிந்து கொண்டு விட்டனர் என்றார் கதிர்காமர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications