மனைவியைக் கொன்ற முதியவருக்கு 7 ஆண்டு சிறை

Subscribe to Oneindia Tamil

கோவை:

நிலத் தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற வழக்கில் 65 வயது முதியவருக்கு 7ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் முத்தையன்(எ) முத்துச்சாமி (65). இவரது மனைவி நஞ்சம்மாள். இருவருக்கும் மூன்று மகள்கள்உண்டு.

அனைவருக்கும் திருமணம் முடித்து விட்டு மனைவியுடன் வாழ்ந்து வந்தார்முத்தையன். அவருக்கு குடிப் பழக்கம் இருந்து வந்தது. இதற்கு அவருக்கு அதிக பணம்தேவைப்பட்டது.

இதற்காக தனது மனைவி நஞ்சம்மாளின் பெயரில் இருந்த இரண்டு ஏக்கர் நிலத்தைவிற்பனை செய்ய வேண்டும் என வற்புறுத்தி வந்தார்.

இந்நிலையில் இந்த நிலம் தொடர்பாக 97ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதிஇருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில், முத்தையன், மனைவி நஞ்சம்மாளை பாக்குக் குச்சியால் அடித்துள்ளார். இதில்அவர் பலத்த காயமடைந்து இறந்து போனார்.

இந்த சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப் பதிவு செய்து முத்தையாவைக்கைது செய்தனர்.

கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், நீதிபதிசொக்கலிங்கம், முத்தையன் என்ற முத்துசாமிக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனைவிதித்து தீர்ப்பளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+