படிக்கட்டில் உற்சாகம் .. பஸ்சிலிருந்து விழுந்து வாலிபர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பஸ் படிக்கட்டில் இருந்து உற்சாகப்படுத்தியவர், தவறி விழுந்து அடிபட்டு இறந்தார்.
சென்னை ஜார்ஜ் டவுன்பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். வயது 18. ஞாயிற்றுக்கிழமை நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக இவர் பஸ்சில்மெரீனா கடற்கரைக்குச் சென்று கொண்டிருந்தார்.
பஸ்சின் படிக்கட்டில் பயணம் செய்த ஸ்ரீதர் உற்சாக மிகுதியில் அவ்வப்போது கையை அசைத்தபடி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால்தடுமாறி கீழே விழுந்தார். இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி நசுங்கி இறந்தார்.












Click it and Unblock the Notifications