சந்திரிகா தம்பியைக் கொல்ல முயற்சி
கொழும்பு:
தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சென்ற சந்திரிகாவின் தம்பி அனுரா பண்டாரநாயகா மீது கொழும்பில் செவ்வாய்கிழமை தாக்குதல் நடந்தது. அவர்காயமின்றி உயிர்தப்பினார்.
அக்டோபர் 10 ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்துக்கு பொதுத்தேர்தல் நடந்தது. தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் மும்முரமாய்ஈடுபட்டுள்ளன.
அதிபர் சந்திரிகாவின் தம்பியும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணித் தலைவருமான அனுரா பண்டாரநாயகே மற்றும் கட்சியின் இன்னொரு தலைவர்ஜெயசூர்யா ஆகியோர் தலைநகர் கொழும்பில் காரில் சென்றபடி தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.
கொழும்பின் புறநகரான ரகாமா அருகே இவர்களது கார் வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று இவர்கள் மேல்துப்பாக்கியால் சுட்டது. அக்கும்பல் தங்களிடமிருந்த கையெறி குண்டுகளையும் வீசினர்.
இத்தாக்குதலில் இவர்கள் இருவரும் காயமின்றி உயிர்தப்பினர். ஐக்கிய தேசியக் கட்சித் தொண்டர்கள் 4 பேர் காயமின்றி உயிர்தப்பினர். இதுகுறித்துப்போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications