கீர்த்திவாசன் போனார்...கிஷோர் வந்தார்
சென்னை:
தெற்கு ரயில்வே பொதுமேலாளர் கீர்த்திவாசன் தென் மத்திய ரயில்வேக்கு மாற்றப்பட்டார். தெற்கு ரயில்வேயின் புதிய பொதுமேலாளராக அஜித்கிஷோர் ந நியமிக்கப்பட்டுள்ளார்.
தெற்கு ரயில்வேயின் பொது மேலாளராக இதுவரை இருந்தவர் கீர்த்திவாசன். இவரது பணிக்காலத்தில் பல்வேறு ரயில்வே திட்டங்கள்நிறைவேற்றப்பட்டன. அதே நேரத்தில் இவர் மீது ஊழல் குற்றச்சாட்டும் கூறப்பட்டது.
சென்னை - திருச்சி அகல ரயில் பாதை அமைக்கும் பணியில் பல லட்ச ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளதாக கீர்த்திவாசன் மீது சி.பி.ஐ.வழக்குத் தொடர்ந்தது.
இதுதொடர்பாக சென்னையில் கீர்த்திவாசனின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது சிக்கிய ஆவணங்களுக்கு அவர்உரிய விளக்கம் அளித்து விட்டதால், அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படாமல் இருந்தார்.
ஆனால், இப்போது அவர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார். போபாலை தலைமையிடமாக கொண்ட தெற்கு மத்திய ரயில்வேக்கு அவர்மாற்றப்பட்டுள்ளார். அங்கிருந்த அஜித் கிஷோர் இங்கு வந்துள்ளார்.