அவசரமாக கூடிய இலங்கை நாடாளுமன்றம்
கொழும்பு:
இலங்கையில் அமலில் உள்ள அவசர நிலையை நீட்டிப்பதற்காக இலங்கைநாடாளுமன்றம் வியாழக்கிழமை கூட்டப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சர் அனிருத்தா ரத்வத்தே இந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.அவர் பேசுகையில், விடுதலைப் புலிகளை எதிர்த்து இலங்கை ராணுவம் தொடர்ந்துபோராட வேண்டியுள்ளது. எனவே ராணுவத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்கும்வகையில், அவசர நிலையை நீட்டிப்பது அவசியம் என்றார்.
கடந்த 1983-ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட தொடர்ந்து அவசர நிலை இலங்கையில்அமலில் இருந்து வருகிறது. முன்னதாக இந்த மாதத் துவக்கத்தில் அதிபர் சந்திரிகாஅவசர நிலையை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். அதற்கு ஒப்புதல் வழங்கவேவியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் கூட்டப்பட்டது.
நாடாளுமன்ற விவகார அதிகாரிகள் தெரிவிக்கையில், தேர்தல் வரை நாடாளுமன்றம்இயங்கும். ஆனால் எந்த நடவடிக்கையும் இருக்காது என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications